இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 66 பேர் பலியாகி உள்ளனர்.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் ஏற்பட்ட இரண்டு நிலசரிவுகளில் இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பலர் இடுபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.